சென்னையில் கோர விபத்து: 2 மாணவர்கள் பலி
சென்னை:
கிழக்குக் கடற்கரைச் சாலையில், மாமல்லபுரம் அருகே அரசு விரைவுப் பேருந்து மீது கார் மோதியதில், காரில் பயணம் செய்த புதுவை மருத்துவக் கல்லூரி மாணவர்மற்றும் மாணவி இருவர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ஆனந்த், புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூயில் இலங்கையைச்சேர்ந்த அம்மு என்ற மாணவியும் படித்து வந்தார்.
அப்போது தனக்கு முன்பாக சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல ஆனந்த் எத்தனித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக எதிரே அரசு விரைவுப் பேருந்துவந்து விடவே, கார், பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்குப் போராடிய அம்முவை அப்பல்லோ மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அம்மு இறந்து விட்டார்.
இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல இடங்களில் சாலையின் நடுவே தடுப்புகள் இல்லை. இதனால் அதி வேகமாக வாகனங்கள் செல்வதும், ஓவர் டேக் செய்வதும்சகஜமான ஒன்று. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால், கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications