ராணி மேரி கல்லூரி: ஸ்டாலின் மீதான வழக்கு நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது.

சென்னை ராணி மேரிக் கல்லூரியை இடிக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து அக் கல்லூரி மாணவிகள் கடந்த 2003ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அக்கல்லூரிக்குச் சென்ற திமுக பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

இதையடுத்து மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வேளச்சேரியில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்குஇரவில் சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர்.

அப்போது தங்களது பணியை செய்ய விடாமல் தடுத்தும், கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறி ஸ்டாலின் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஒரு போலீஸ் வாகனம் தாக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறினார்கள்.

கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின் அவர் 21ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (10ம் தேதி) நீதிபதி முருகேசன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் டி.வி.கணேஷ் ஆஜரானார். பின்னர்விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு ஸ்டாலின் உட்பட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகசம்மன் அனுப்பப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+