வாக்காளர் பட்டியல்: சென்னையில் வட மாவட்ட கலெக்டர்கள் கூட்டம்!
சென்னை:
போலி வாக்காளர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் சென்னையில் திங்கள்கிழமை கூட்டியுள்ளது.
தமிழக வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் ஏராளமான போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகள்வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலி வாக்காளர் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும், சேலம்,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதுவரை அறிக்கை அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
இத்தகைய குழப்பங்கள் காரணமாக, வட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூட்டியுள்ளார். சென்னையில்நாளை (திங்கள்கிழமை) நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்டமாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் போலி வாக்காளர் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சித் தலைவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். மேலும் அரசியல்கட்சிகளின் புகார்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications