திருத்தல யாத்திரை செல்ல ஜெயேந்திரர் முடிவு
கலவை:
ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களுக்கு ஆன்மீக யாத்திரை செல்ல ஜெயேந்திரர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி, பின்னர் ஜாமீனில் விடுதலையாகி, கலவை சங்கர மடத்தில் தங்கியிருந்த ஜெயேந்திரர் 8 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும்காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு கடந்த புதன்கிழமை வந்தார். அவருடன் விஜயேந்திரரும் காஞ்சி வந்து சேர்ந்தார்.
போலீஸ் விசாரணை தொடரும் என்ற அச்சமும் எழுந்ததால் மீண்டும் கலவை மடத்திற்குத் திரும்ப ஜெயேந்திரர் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமைஅதிகாலை காஞ்சியிலிருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் கலவை சென்று சேர்ந்தனர் இரு சங்கராச்சாயார்களும்.
இந்த நிலையில், போலீஸ் விசாரணை, வழக்கு விவகாரம் என சுற்றிச் சுற்றி வருவதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட சில ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யஜெயேந்திரர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அவருடன் விஜயேந்திரரும் செல்வார் எனத் தெரிகிறது. எப்போது இந்த யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்படவில்லை.