போலி வாக்காளர்கள்: டெல்லிக்கு கலெக்டர்கள் அறிக்கை- நரேஷ் குப்தா தகவல்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ள தொகுதிகளில் விரைவில் மத்திய, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
மேலும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் அழைத்து வாக்காளர் பட்டியலில் சரியான பெயர்களை சேர்ப்பது, போலி வாக்காளர்களை சேர்த்தது, போலிவிண்ணப்பங்களை கொடுத்த கட்சிகளின் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த தமிழக தேர்தல் கமிஷனுக்குமத்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் போலியாக வாக்காளர்களை சேர்த்த அதிகாரிகள் மற்றும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு நரேஷ் குப்தா கூறுகையில், மத்திய தேர்தல் கமிஷனர் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்காளர்பட்டியல் தொடர்பாக மத்திய தேர்தல் கமிஷனர் வழங்கிய ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தெரிவித்தேன்.
வாக்காளர் பட்டியலை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் கூறினேன். தகுதியான மனுக்களை ஏற்கவும், போலியான மனுக்களை நிராகரிக்கவும்அறிவுறுத்தப்பட்டன.
விரைவில் மத்திய, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்ட தொகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யும். விழுப்புரம், சேலம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த அறிக்கைகள் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசியல் கட்சிகளிடம் அளித்த வரைவு வாக்காளர் பட்டியலில் முகவரி இல்லை என்று கூறப்பட்டது. விரைவில் முகவரியுடன் வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்படும் என்றார்.