ஈரானில் தொடர் குண்டுவெடிப்பு: அமெரிக்கா மீது புகார்
தெஹ்ரான்:
ஈரானில் ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அந் நாட்டில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இராக்கில் இருந்து ஊடுருவிய அமெரிக்க ஆதரவு அரேபிய தீவிரவாதிகள் தான் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இவர்களுக்கு அமெரிக்காதான் பயிற்சி அளித்து அனுப்பியுள்ளதாகவும், இந்தத் தீவிரவாதிகளுக்கும் இராக்கில் உள்ள இங்கிலாந்துப் படைகளுக்கும் தொடர்புள்ளதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா, பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இதுவரை அதை இரு நாடுகளும் காதில்வாங்கவே இல்லை. தேர்தலை சீர்குலைக்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என ஈரான் கூறியுள்ளது.
ஈரானில் வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications