For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறட்சியால் கர்நாடகத்தில் குடியேறும் தமிழக வன விலங்குகள்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கடும் வறட்சி காரணமாக தமிழக வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் ஏராளமான அளவில் கர்நாடகத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளன.

கர்நாடக எல்லையை ஒட்டிய தமிழக வனப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. சாதாரணமாக இந்தப் பகுதிகளில் ஆண்டுக்குசராசரியாக 93 செ.மீ.மழை பெய்ய வேண்டும்.

ஆனால் கடந்த 4 வருடங்களாக மிகக் குறைவான மழையே பெய்ததால் இந்த வனப் பகுதியிலுள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் என அத்தனையும் வறண்டுவிட்டன.

இதனால் தண்ணீர் கிடைக்காமல் இப் பகுதியில் வாழும் யானை, மான், கடுவாய் புலி, சிறுத்தைப் புலி உட்பட பல வன விலங்குகள் இங்கிருந்து வெளியேறி கர்நாடகவனப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன.

தமிழக வனப் பகுதியான ஊட்டி, தலமலை, ஆசனூர், திம்பம் உட்பட பல பகுதிகளில் இருந்து கர்நாடகத்திலுள்ள சாம்ராஜ் நகர், ஜோடிகெரே, புனஜனூர், பீடகுளிமற்றும் பண்டிப்பூர் வன விலங்குகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான விலங்குகள் சென்று விட்டன.

வழக்கமாக இனப் பெருக்கம் போன்றவற்றுக்காக இந்தப் பகுதிக்கு வரும் விலங்குகள் பிறகு மீண்டும் தங்களது இடத்திற்கு சென்று விடும். ஆனால் கடந்த சிலவருடங்களாக தொடர்ந்து வறட்சி நிலவுவதால் இப்போது இந்த விலங்குகள் மீண்டும் தமிழகத்திற்கு செல்லாமல் இங்கேயே தங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் வனவிலங்குகளுக்காக வனத்துறையினர் ஆங்காங்கே தடுப்பு அணைகளைக் கட்டி தண்ணீரை சேமித்து வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனாலும்மழையே பெய்யாததால் இந்த முயற்சி நீண்ட நாட்களுக்கு பலனளிக்கவில்லை.

ஆனால் சாம்ராஜ் நகர் பகுதிகளில் இப்போதும் நல்ல மழை பெய்து வருவதால் தமிழக வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X