பாழும் கிணற்றில் 3 ஆண் பிணங்கள்; கயத்தாறு அருகே பயங்கரம்!
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே பாழும் கிணற்றில் 3 ஆண்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. விபச்சார அழகிகளுடன் வந்தகும்பல்தான் இவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
அந்த லாரியைக் கைப்பற்றிய போலீஸார் அதை கோர்ட்டில் ஒப்படைக்கவும், அதன் உரிமையாளர் குறித்து விசாரிக்கவும் ஆரம்பித்தனர். அந்தலாரியில் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந் நிலையில் கயத்தாறு அருகே ஆசூர் என்ற இடத்தில் ஒரு பாழும் கிணற்றில் 3 ஆண்களின் பிணங்கள் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து உடல்களை மீட்டனர். கத்திக் குத்து காயங்களுடன் அந்த 3 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில்வீசப்பட்டுள்ளனர். அழுகிய நிலையில் இருந்ததால் அவர்களது முகங்களை அடையாளம் காண முடியவில்லை.
இந்த 3 பேரும் லாரியில் வந்த டிரைவர், கிளீனர் மற்றும் அவர்களது உதவியாளர் எனத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த 3 பேர் குறித்தும்ஒருவர் அப் பகுதியில் விசாரித்துள்ளார்.
மேலும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தொலைபேசி எண்ணையும் நாலாட்டின்புத்தூர் காவல் நலையத்தில் அவர் கொடுத்து விட்டுச் சென்றார்.
அந்தத் தொலைபேசி எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து அடையாளம் காட்டினால்தான் அவர்கள்லாரியில் வந்தவர்களா என்பது குறித்து உறுதியாகத் தெரிய வரும்.
இந்தப் பகுதியில் விபச்சார அழகிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருப்பதால் லாரி டிரைவர்கள்இப்பகுதியில் விபச்சார அழகிகளுடன் ஜாலியாக இருந்துவிட்டுச் செல்வது வழக்கம்.
எனவே விபச்சார அழகிகளிடம் இந்த 3 பேரும் சென்றிருக்க வேண்டும். அப்போது தகராறு ஏற்பட்டு அதில் 3 பேரும் அழகிகளின் அடியாட்களால்கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications