For Daily Alerts
Just In
காவிரி நீர் கோரி ரயில் மறியல்: தமிழக விவசாயிகள் முடிவு
தஞ்சாவூர்:
காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு கர்நாடகம் உரிய நீரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலை 14 மற்றும் 15 ஆகியதேதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம்ஆகியவை அறிவித்துள்ளன.
காவிரியில் கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விட வேண்டும். கர்நாடகத்திடமிருந்து உரிய நீரைப் பெற்றுத் தர மத்திய மற்றும் மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அதேபோல, காவிரி டெல்டாமாவட்டங்களில் 100 இடங்களில் விவசாயத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றார்.
Comments
Story first published: Tuesday, June 14, 2005, 5:30 [IST]