குருமூர்த்தி மீது 2 அவதூறு வழக்குகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆடிட்டர் குருமூர்த்தி மீது தமிழக அரசு 2 அவதூறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கு குறித்தும், ஜெயேந்திரர் கைது குறித்தும் ஆடிட்டர் குருமூர்த்தி த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்பத்திரிக்கையில் விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். இதையடுத்து அவரை காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவிற்கு அழைத்துதனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் குருமூர்த்தியைக் கைது செய்யவும் தனிப்படை போலீஸார் திட்டமிட்டனர். இருப்பினும் அவர் மும்பை உள்ளிட்டநகர்களுக்குச் சென்றுவிட்டதால் போலீஸாரின் கைது திட்டத்திலிருந்து தப்பித்து வருகிறார். இந் நிலையில் குருமூர்த்தி மீது 2அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

தமிழக அரசின் வழக்கறிஞர் டி.வி.கணேஷ் இதுதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுக்களில், சங்கரராமன் கொலை வழக்கு குறித்தும், ஜெயேந்திரர் கைது குறித்தும் குருமூர்த்தி தொடர்ந்து எழுதி வரும்கட்டுரைகள் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதி வரும் குருமூர்த்தியைத் தண்டிக்கவேண்டும் என மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களைப் பரிசீலனை செய்த நீதிபதி முருகேசன், இவற்றை 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்குஅனுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+