சிறுவனுடன் பாலியல் உறவு: மைக்கேல் ஜாக்ஸன் விடுதலை
சான்டா மரியா (கலிபோர்னியா):
சிறுவனுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் விடுவிக்கப்பட்டார்.
ஆர்விகோ என்ற 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டதாக பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்ஸன் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2003ம் ஆண்டுகலிபோர்னியாவிலுள்ள சான்டா மரியா நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மைக்கேல் ஜாக்ஸன் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாக்ஸன் மீது 10 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. புகார் கூறிய சிறுவன் ஆர்விகோ, அவனது தாய் உட்பட மொத்தம் 140 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் 600 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜாக்ஸனுக்கு ஆதரவாக முன்னாள் நடிகை எலிசபெத் டெய்லர் சாட்சியம் அளித்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை கேட்பதற்காக மைக்கேல் ஜாக்ஸன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
வழக்கை விசாரித்த 12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு, ஜாக்ஸன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஜாக்ஸனைவிடுவிப்பதாக நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த மைக்கேல் ஜாக்ஸன் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து கையசைத்து தனதுமகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications