போலி விபச்சார வழக்கு: ஜெயலட்சுமிக்கு சிபிஐ சம்மன்
மதுரை:
போலீசாரால் தொடரப்பட்ட போலி விபச்சார வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சிவகாசி ஜெயலட்சுமிக்கு சிபிஐ சம்மன்அனுப்பியுள்ளது.
போலீஸார் மீது சரமாரியாக புகார்கள் கூறிய ஜெயலட்சுமி மீதே பல வழக்குகள் திரும்பி வருகின்றன. அவர் மீது மதுரை, தாராபுரம், கோவை, திருச்சிஆகிய ஊர்களில் 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந் நிலையில் மற்றொரு வழக்கில் ஜெயலட்சுமியை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
டிஎஸ்பி ராஜசேகருடன் ஜெயலட்சுமிக்கு மோதல் ஏற்பட்டவுடன், அவரது தூண்டுதலின் பேரில் நெல்லை இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ், ஜெயலட்சுமிமீது விபச்சார வழக்கு தொடர்ந்து கைது செய்தார். லாக்-அப்பில் வைத்து ஜெயலட்சுமியிடம் ஜான் அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக முன்பு விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஜான் ரோஸ் உள்ளிட்ட 5 பேரிடமும் விசாரித்தனர். பின்னர் வழக்குஅப்படியே கிடப்பில் இருந்தது.
இந் நிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
வரும் 16ம் தேதி இந்த விபச்சார வழக்கு விசாரணைக்காக நெல்லையில் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு இந்த வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications