கருணாநிதி மீதான அவதூறு வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை வருகிற 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கை வேறுநீதிபதிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
அந்த மனுவில், வழக்கு பதிவு செய்து ஒரு கிரிமினல் வழக்கை விசாரணை செய்வது போலீஸாரின் தனிப்பட்ட அதிகாரமாகும்.இதில் முதல்வர் கூட தலையிட முடியாது. எனவே வேண்டுமென்றே கருணாநிதி இந்த கருத்துக்களை கூறியுள்ளார். இதனால்அவதூறு சட்டத்தின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி முருகேசன் முன்னிலையில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கும்படிநீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications