சுனாமி நிவாரணம்: கொழும்பில் புத்த துறவிகள் வன்முறை
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண நிதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் புத்த துறவிகள் வன்முறைப் போராட்டம் நடத்தினார்கள்.
அதிபர் சந்திரிகாவின் வீட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற புத்த துறவிகளை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினார்கள். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண நிதி வழங்க தீர்மானித்துள்ளது. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகளும், புத்தமத அமைப்புகளும்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உயிரைக் கொடுத்தாவது சந்திரிகாவின் இந்த திட்டத்தை தடுப்போம் என்று புத்தமத துறவிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து புத்த துறவிகள் திங்கட்கிழமை கொழும்பில் வன்முறைப் பேரணி நடத்தினார்கள். அதிபர் சந்திரிகாவின் வீட்டை நோக்கிஆயிரக்கணக்கானோர் படையெடுத்தனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள்.
போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து புத்த துறவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கொழும்பு நகரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications