சுனாமி நிவாரணம்: கொழும்பில் புத்த துறவிகள் வன்முறை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

Budhists விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண நிதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் புத்த துறவிகள் வன்முறைப் போராட்டம் நடத்தினார்கள்.

அதிபர் சந்திரிகாவின் வீட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற புத்த துறவிகளை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினார்கள். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண நிதி வழங்க தீர்மானித்துள்ளது. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகளும், புத்தமத அமைப்புகளும்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உயிரைக் கொடுத்தாவது சந்திரிகாவின் இந்த திட்டத்தை தடுப்போம் என்று புத்தமத துறவிகள் கூறுகின்றனர்.

இந் நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து புத்த துறவிகள் திங்கட்கிழமை கொழும்பில் வன்முறைப் பேரணி நடத்தினார்கள். அதிபர் சந்திரிகாவின் வீட்டை நோக்கிஆயிரக்கணக்கானோர் படையெடுத்தனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்ட கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஆனாலும் கலவரம் ஓயவில்லை. போலீஸார் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து புத்த துறவிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். இதில் ஏராளமான புத்த துறவிகள் காயமடைந்தனர்.

போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து புத்த துறவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கொழும்பு நகரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+