கோலாலம்பூரில் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மாநாடு
சென்னை:
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலக திருக்குறள் ஆராய்ச்சி மாநாடு வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.
கோலாலம்பூரில் நடைபெறும் உலக திருக்குறள் ஆராய்ச்சி மாநாட்டில் விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 150 பேர் கலந்து கொள்கின்றனர்.மேலும், மாநாட்டுக்காக 6 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை விஜிபி உலக தமிழ்ச் சங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
தமிழகத்திலிருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தமிழறிஞர்கள் மணவை முஸ்தபா, வா.மு.சேதுராமன், ரவிபாரதி, லேணா தமிழ்வாணன்,முன்னாள் துணைவேந்தர் அறவாணன், விஜிபி சகோதர்கள் சந்தாஷம், செல்வராஜ், ரவிதாஸ், ராஜாதாஸ் உள்ளிட்ட 150 பேர் கலந்துகொள்கின்றனர்.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம், ஆய்வு உரைகள், சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், விஜி சந்தோஷம் எழுதிய வாழ்வின் இலக்கணம் வள்ளுவம் என்ற நூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.