ப.சிதம்பரத்தின் சிவகங்கை வெற்றி செல்லும்!
சென்னை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
இந் நிலையில் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் கருப்பையா உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.
அதில், ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தின் கீழ் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் அவர்தன்னைப் பதிவு செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அதே சமயத்தில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவராகவும், உறுப்பினராகவும் அவர் அப்போது இருந்தார். இப்படி இருகட்சிகளின் உறுப்பினராக இருந்து கொண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டது, தேர்தல் சின்ன விதிமுறைகளின்படி சட்ட விரோதமானதாகும்.
எனவே அவரது தேர்வு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகப்பன் இன்று தனது தீர்ப்பை அறிவித்தார்.
அதில், சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராகத்தான் போட்டியிட்டார். எனவே அவரது வெற்றி செல்லும் என்று கூறிகருப்பையாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.