சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்: அந்தமானிலும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சாண்டியகோ & போர்ட்பிளேர்:
தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று காலை மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பலர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
இன்றைய சிலி நாட்டு சக்தி வாய்ந்த பூகம்பத்தால் அமெரிக்காவின் ஹவாய் கடலோரப் பகுதியில் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பரவியது. ஆனால்,கடலடியில் நிலநடுக்கம் ஏற்படாததால் சுனாமிக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.
பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் உடைந்து விழுந்தன. இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை.
இந் நிலையில் இன்று அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications