சாலைப் பணியாளர்கள் சங்கத்தில் பிளவு?
சென்னை:
10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம்நடக்கவுள்ளது.
இந் நிலையில் இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க அதிமுக சதி செய்வதாக தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சித்தையன்கூறியுள்ளார்.
இந் நிலையில் சாலைப் பணியாளர்களுக்கிடையே தமிழக அரசு பிளவை ஏற்படுத்த முயலுவதாகவும், அதன் மூலம் போராட்டத்தை முறியடிக்கமுயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கத் தலைவர் சித்தையன் கூறுகையில்,
இந்தப் போராட்டம் எங்களுக்காக நடக்கிறது. ஆனால் எங்களுக்குள் பிளவை ஏற்படுத்தி இப் போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வதைத் தடுக்கதமிழக அரசும், அதிமுக தலைமையும் முயல்கின்றன.
சங்கத்தில் பிளவு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இப் போராட்டத்தில்கலந்து கொள்ள வேண்டும் என்றார் சித்தையன்.
அம்மாவே சரணம்: இன்னொரு தலைவர்
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகராஜா அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10,000 சாலைப் பணியாளர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள், போராட்டங்கள் மூலம்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை விட தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வை அறிவிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம்.
எங்கள் மீது கருணை கொண்டு மீண்டும் பணி வழங்கி எங்களது வாழ்வில் முதல்வர் ஒளியேற்ற வேண்டும். மீண்டும் வேலை தந்தால் அந்த நன்றியைஎன்றென்றும் மறக்க மாட்டோம். எதிர்க் கட்சிகளின் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் சாலைப் பணியாளர்கள் சங்கத்தை அதிமுக அரசு உடைத்துவிட்டது தெள்ளத் தெளிவாகியுள்ளது.