For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாராக மாறும் தமிழகம்: தலைமை நீதிபதி கவலை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ளதைப் போன்ற குண்டர் கலாச்சாரம் தமிழகத்திலும் வந்து விட்டதோ என்று கவலை ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்றதலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள திருவொற்றியூர், ஓடைக் குப்பம் பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர் குடும்பங்களை அந்த ஊர்பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்பு, கேபிள் இணைப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஊர் பஞ்சாயத்தார் துண்டித்துள்ளனர்.

இதை எதிர்த்து பூபால் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பீகார், உத்தரபிரதேசம் போன் மாநிலங்களில்தான் இதுபோன்ற குண்டர்கள் செயல்படுகிறார்கள். அந்த கலாச்சாரம் இங்கும் வந்து விட்டதா?

இந்த பிரச்சினையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்று கூறிய கட்ஜூ இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம்அளிக்குமாறு டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X