ஜெ. விதண்டாவாதம்: கருணாநிதி தாக்கு
சென்னை:
சென்னையில் மோட்டார் வாகன சோதனை மையத்தை அமைப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தன்னை கடுமையாக சாடியிருப்பதற்கு திமுக தலைவர்கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், எந்தவித முயற்சியும் செய்யாமல், பெருமையை மட்டும் தட்டிச் செல்ல நான் முயற்சிப்பதாக கடுமையாக சாடிஅறிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதமே தான் பிரமதருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி 5ம் தேதியே, அமைச்சர் டி.ஆர்.பாலு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சந்தோஷ் மோகன் தேவுக்கு கடிதம்எழுதியுள்ளார். தமிழக மக்களின் தேவையைக் கருதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததை பாராட்டாவிட்டாலும் சரி, இதுபோல விதண்டாவாத அறிக்கைவிடுவது மக்கள் நலனுக்கு பயன்படாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications