செவ்வாய் கிரக பாறைக்கு தமிழ்ப் பெயர் - பொங்கல்!
கொல்கத்தா:
செவ்வாய் கிரக பாறை ஒன்றுக்கு பொங்கல் என்று தமிழ்ப் பண்டிகையின் பெயரை சூட்டியுள்ளது அமெரிக்க விண்வெளிஆய்வு நிறுவனமான நாசா.
இந் நிலையில் நாசா குழுவினர் கொல்கத்தாவைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று மாலை அளித்த பேட்டியில்,செவ்வாய் கிரகத்தில் 3 பாறைகளுக்கு இந்தியப் பெயர்களை சூட்ட நாசா முடிவு செய்தது.
ஒரு பாறைக்கு தமிழ்ப் பண்டிகையான பொங்கல் என்ற பெயரை சூட்டியுள்ளது. புகழ் பெற்ற இந்தியப் பண்டிகை என்றவரிசையில் இப்பெயர் தேர்வு செய்யப்பட்டது.
இன்னொரு பாறைக்கு உலகின் முதல் பல்கலைக்கழகமான நாலந்தாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாலந்தாபல்கலைக்கழகம் பழம் பெருமை வாய்ந்தது மட்டுமல்லாமல், கல்வி வளர்ச்சியில் ஆற்றிய முக்கிய பங்கும் கருத்தில்கொள்ளப்பட்டு அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மூன்றாவது பாறைக்கு கோஹினூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகப் புகழ் வாய்ந்த வைரத்தின் பெயர் என்பதால் இந்தப்பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பண்டிகையான பொங்கலின் பெயர் செவ்வாய் கிரக பாறைக்கு சூட்டப்பட்டுள்ளதன் மூலம் செம்மொழி தமிழ்செவ்வாய் மொழியாகவும் மாறியுள்ளது.