For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு: போலீஸுக்கு 1 மாதம் கெடு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஜோதி ராமலிங்கம் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில், ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்வு) மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது இன்று நீதிபதிகள் சிவசுப்ரமணியம், எஸ்.கே.கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது சிபிசிஐடி போலீஸ் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர், அரசுத் தரப்பில் சந்தேகப்படும் 4 பேரிடம் பெங்களூரில் ஆழ்நிலை மனோதத்துவ முறைப்படி விசாரணை நடந்து வருகிறது.

எனவே இறுதிக் கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 மாதம் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு ஜோதி ராமலிங்கத்தின் வழக்கறிஞர் சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,பெங்களூர் விசாரணை குறித்த அறிக்கையை இன்னும் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின்இறுதிக் கட்ட விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 13ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X