நாடு முழுவதும் ஒரே தொலைபேசிக் கட்டணம்: தயாநிதி மாறன்
டெல்லி:
விரைவில் நாடு முழுவதும் ஒரே தொலைபேசிக் கட்டணம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில் நுட்பம்மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இந்த முறை அமலானால் இந்தியா முழுவதும் லோக்கல் கால் வசதியிலேயே பேசிக் கொள்ளலாம்.
"ஒரே இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் தொலைத் தொடர்புத் துறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்க மத்தியஅரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதனடிப்படையில் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் ஒரே மாதிரியான தொலைபேசிக் கட்டண வசதிவிரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
புதிய முறையின் மூலம் எஸ்டிடி முறை ஒழிக்கப்பட்டு நாடு முழுவதும் லோக்கல் கால் கட்டணத்திலேயே பேசிக் கொள்ளலாம்என்பது தானே இதற்கு அர்த்தம் என்று கேட்டதற்கு, எனது வார்த்தையில் பொதிந்து கிடக்கும் பொருளை புரிந்து கொள்ளுங்கள்என்று சூசகமாக கூறினார் மாறன்.
தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான வழிகாட்டு முறைகள்அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மாறன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications