சங்கரமட கணக்கு: விஜயேந்திரர் முன் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரமடம் கணக்குகள் திருத்தப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயேந்திரர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

காஞ்சி சங்கரமடத்தின் கணக்குகள் திருத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சங்கரமட கணக்காளர் காலடி விஸ்வநாதன், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜெயேந்திரர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.

இந் நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கடந்த 10ம் தேதி விஜயேந்திரர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது சார்பில் வழக்கறிஞர்கள்சண்முகம், வரதன், தினகரன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கு மீதான விசாரணை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள 24 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+