மயூரி @

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல தமிழ் துணை நடிகை ஷாலினி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாததால்தற்கொலை செய்வதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இவரது தற்கொலைக்கு காதல் தோல்வி காரணமா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Shaliniபாண்டியராஜன் நடித்த கும்பகோணம் கோபாலு என்ற படத்தில் மயூரி என்ற பெயரில் அறிமுகமானவர் தான் இவர். இவரதுசொந்தப் பெயர் ஷாலினி. பிறகு மயூரி என்ற பெயர் ராசியாக இல்லாததால் தனது சொந்தப் பெயரையே வைத்துக் கொண்டார்.

பின்னர் ஷாலினி என்ற பெயரிலேயே சிம்புவின் மன்மதன், 7 ஜி ரெயின்போ காலனி, விசில், கனா கண்டேன் ஆகிய படங்களில்துணை நடிகையாக நடித்தார். ஏராளமான மலையாளப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஷாலினியின் வீடு சென்னை அண்ணா நகரில் உள்ளது. நேற்று பகல் 2 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்ததும் அண்ணா நகர் போலீஸார் விரைந்து சென்று ஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஷாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம்இல்லை என்றும் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாததால் தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வேறு யாரும்காரணம் அல்ல என்று எழுதி வைத்துள்ளார். அதேபோல தனது அண்ணனுக்கு அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில்,அப்பா,அம்மாவைப் பார்த்துக் கொள் என்று எழுதியுள்ளார்.

ஷாலினிக்கு சமீப காலமாக அதிக அளவில் பட வாய்ப்புகள் இல்லை. காதலிலும் அவர் தோல்வியுற்றதாகத் தெரிகிறது.

ஷாலினியின் சகோதரர் நத்தின் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவரது பெற்றோர் குமார், சாந்தி ஆகியோர்ஷாலினியுடன்தான் தங்கியிருந்தனர். ஷாலினியின் தற்கொலை குறித்து அண்ணா நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+