நுழைவு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் வழக்கு!
சென்னை:
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தனது மனுவில், மருத்துவ நுழைவுத் தேர்வில் நான் மாநிலத்திலேயே தலிடம் பிடித்தேன். தற்போது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது.
இதனால் நான் விரும்பும் மருத்துவக் கல்லூரி இடம் எனக்குக் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே அரசு உத்தரவுக்கு தடை விதித்துநுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மற்ற மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் வரும் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில், நாகேஸ்வரி என்ற மாணவி தாக்கல் செய்த மனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் அறையிலிருந்து இந்த ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில்நாகேஸ்வரியின் வழக்கறிஞர் புகார் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications