ஜெ. காரை வழி மறிக்க பொதுமக்கள் முடிவு!
சென்னை:
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் முதல்வர் ஜெயலலிதாவின் காரை வழிமறிப்போம் என பொது மக்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இந் நிலையில் கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகளுக்கு ஒரு நாள் கெடுவிதித்துள்ளனர்.
அதற்குள் தீர்க்காவிட்டால் ஜெயலலிதாவின் காரை வழிமறித்துப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை இப்பகுதி பொது மக்கள் பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாளைக்குள்(வெள்ளிக்கிழமைக்குள்) உங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அதிகாரிகள் அவர்களுக்கு உறுதியளித்தனர்.
இதையடுத்து நாளைக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவுக்குசெல்லும்போது சாலை மறியல் போராட்டம் நடத்தி ஜெயலலிதா காரை வழிமறிப்போம் என மக்கள் எச்சரித்துவிட்டு அந்த மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
கொட்டிவாக்கம் பகுதி மக்களின் எச்சரிக்கையால் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications