சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்: ஜெயேந்திரர் ஆஜர்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட் 22 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவிசுப்பிரமணியன் அப்ரூவரானார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த மே மாதம் 27ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அன்று ஜெயேந்திரர் உட்பட அனைவரும் ஆஜராகினர்.
பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு நீதிபதி அக்பர் அலி தள்ளிவைத்தார்.
இதன்படி இன்று வழக்கு விசாரணை தொடங்கியது. இதையொட்டி இன்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 22 பேர்செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ரகு மற்றும் சுந்தரேச அய்யர் ஆகியோர் ஆஜகாவில்லை.
இன்று முதல் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
விஜயேந்திரருக்கு முன் ஜாமீன்:
இதற்கிடையே சங்கரமட கணக்குகளை திருத்திய வழக்கில் விஜயேந்திரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுமீதான விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அக்பர் அலி,விஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் .
"லகு கும்பாபிஷேகம்:
இதற்கிடையே காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஜெயேந்திரர் முன்னிலையில் லகு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
மஹா கும்பாபிஷேகம் என்பது பிரமாண்டமான முறையில் நடத்தப்படுவது. அந்த அளவுக்கு பெரியதாக இல்லாமல், மிகவும் எளிமையாக நடத்தப்படும்கும்பாபிஷேகத்திற்கு "லகு கும்பாபிஷேகம் என்று பெயர். இது ஒரே நாளில் நடந்து முடியும்.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு இத்தகைய "லகு கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள்நடக்கவுள்ளது. ஜெயேந்திரர் முன்னிலையில் இந்த கும்பாபிஷேகம் நடக்கிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சங்கர மட நிர்வாகத்தின் கீழ் உள்ளது.












Click it and Unblock the Notifications