லீவ் போட்டு விபச்சார விடுதி நடத்திய ஏட்டு!
சென்னை:
சென்னை அருகே வேலைக்கு விடுப்பு போட்டு விட்டு விபச்சார விடுதியை நடத்தி வந்த தலைமைக் காவலரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் பணியில் இருந்து நீண்ட விடுப்பு போட்டு விட்டு விபச்சார விடுதி நடத்தி வந்த எட்டையா ஒருவரை போலீஸார்கைது செய்துள்ளனர். இந்தக் கதை வருமாறு:
சென்னை போரூரையடுத்து உள்ளது மெளலிவாக்கம். இங்குள்ள பூமாநகர் என்ற பகுதியில் பங்களா ஒன்றில் விபச்சாரமநடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து சென்னை மாநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்பப் பிரிவுபோலீஸார் இங்கு கண்காணிப்பில் இறங்கினர்.
சாதாரண உடையில் போலீஸார் பங்களாவை கண்காணித்தனர். அப்போது ஏராளமான இளம் பெண்கள் அட்டகாசமானஉடையுடன் அங்கு வருவதும், அவர்களுடன் ஆண்களும் வருவதுமாக இருந்ததைப் பார்த்தனர்.
இதையடுத்து மப்டி போலீஸார் சிலர் வாடிக்கையாளர் போல அங்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தனர்.
பணம் கொடுத்தால் அழகிகள் அணி வகுப்பார்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது.
இதையடுத்து பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்ற போலீஸார் வெளியே நின்றிருந்த போலீஸாருக்குத் தகவல் கொடுத்துஉள்ளே வரவழைத்து விபச்சாரக் கும்பலை வளைத்துப் பிடித்தனர்.
அப்போது அறை ஒன்றுக்குள் இருந்து ஒருவர் கோபமாக வெளியே வந்தார். நான் போலீஸ்காரன், ஏட்டு, யாரைக் கேட்டுஇவர்களைக் கைது செய்கிறீர்கள் என்று அவர் ஆவேசமாக கேட்கவே, கடுப்பாகிப் போன போலீஸார் அவரை தூக்கி போட்டுமிதித்து விசாரித்தனர்.
அப்போது சென்னை நகரின் முக்கியமான காவல் நிலையம் ஒன்றில் ஏட்டையாவாக இருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து போலீஸார் பங்களாவின் உரிமையாளர் மணி என்பவரை விசாரித்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட ஏட்டுதான்இந்த விபச்சாரத் தொழிலையே முன்னின்று நடத்தி வருகிறார் என்றும், கடந்த ஒரு மாதமாக விடுப்பு எடுத்துக் கொண்டுவிபச்சாரத்தை படு தீவிரமாக நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். மணியிடமும், ஏட்டிடமும் போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications