சென்னை: 1,000 சுனாமி நிவாரண வீடுகள் தீயில் கருகின
சென்னை :
சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சுனாமி நிவாரண தற்காலிக வீடுகள்தீயில் எரிந்து சாம்பலாயின.
காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகள் எரிந்துசாம்பலாயின. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் ஓரளவு தீ அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆயிரம் வீடுகள் வரை எரிந்துவிட்டன. தீவிபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. நேற்று முன் தினமும் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டு 70 வீடுகள் எரிந்தன. மீண்டும்அதே பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதால், சுனாமியால் பாதிக்கப்பட்டு இங்கு தஞ்சம் புகுந்திருந்தவர்கள் மிகுந்த வேதனைஅடைந்தனர்.