For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்து குவிப்பு-, லண்டன் ஹோட்டல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் ஜெ. மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்து விசாரிப்பதா அல்லது தனித் தனியாக விசாரிப்பதா என்பதை தெளிவுபடுத்து கோரி முதல்வர்ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த இரண்டு வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதுதொடர்பான மனு மீது பெங்களூர் நீதிமன்றத்தில் இரு தரப்பு விவாதங்கள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் இரு வழக்குகளையும் சேர்த்த விசாரிப்பதா, தனித்தனியாக விசாரிப்பதா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரி ஜெயலலிதா சார்பில் இன்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை எப்படி விசாரிப்பது என்பது குறித்து விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன்உத்தரவிட்டுள்ளார்.

அதே நீதிபதி முன்பு இந்த புதிய மனு நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X