சென்னை பெண்கள் கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை
சென்னை:
மாணவிகளின் நலன் கருதி சென்னையில் பெண்கள் கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கல்லூரிகளில் கேமரா செல்போன்களுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதே போல சென்னை எத்திராஜ்பெண்கள் கல்லூரியிலும் ஏற்கனவே செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேமரா செல்போன்கள் மூலம் உடன் படிக்கும் மாணவ, மாணவிகளே மற்றவர்களை ஆபாசமாக படமெடுத்து அனுப்புவது அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்துபல கல்லூரிகளில் கேமரா செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வு மையங்களில் செல்போன்களை கொண்டு செல்லவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பெண்கள் கல்லூரிகளில் செல் போன்களுக்கே ஒட்டுமொத்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் எத்திராஜ் கல்லூரியோடு ஸ்டெல்லா மேரீசும் சேர்ந்துள்ளது.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளின் வசதிக்காக 2 டெலிபோன் பூத்துகளை தொடங்கவும் அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விரைவில் சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியிலும் விரைவில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications