For Quick Alerts
For Daily Alerts
Just In
குஜராத் கலவரம்: ஆவணங்கள் தர ஜனாதிபதி மாளிகை மறுப்பு
அகமதாபாத்:
குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, அப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அனுப்பிய குறிப்புக்களை நீதிமன்றத்திடம்வழங்க ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துள்ளார்.
இந்த கமிஷன் முன் ஆஜராகி வரும் குஜராத் அரசின் வழக்கறிஞர் இந்த ஆவணங்களைக் கோரி ஜனாதிபதி மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தஆவணங்களைத் தர முடியாது என ஜனாதிபதி மாளிகை பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
குஜராத் கலவரத்தை அடக்க வாஜ்பாய் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி நாராயணன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, June 17, 2005, 5:30 [IST]