For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் கலவரம்: ஆவணங்கள் தர ஜனாதிபதி மாளிகை மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, அப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அனுப்பிய குறிப்புக்களை நீதிமன்றத்திடம்வழங்க ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரம் குறித்து நானாவதி-ஷா கமிஷன் விசாரித்து வருகிறது.

இந்த கமிஷன் முன் ஆஜராகி வரும் குஜராத் அரசின் வழக்கறிஞர் இந்த ஆவணங்களைக் கோரி ஜனாதிபதி மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தஆவணங்களைத் தர முடியாது என ஜனாதிபதி மாளிகை பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

குஜராத் கலவரத்தை அடக்க வாஜ்பாய் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி நாராயணன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X