விபச்சார வழக்கு: நெல்லை கோர்ட்டில் ஜெயலட்சுமி ஆஜர்
திருநெல்வேலி:
விபச்சாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி இன்று ஆஜரானார்.
கடந்த 2002ம் ஆண்டு ஜெயலட்சுமி மீது நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டஜெயலட்சுமி 40 நாள் சிறைவாசத்தையும் அனுபவித்தார். பின்னர் இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
சிபிஐ பரிந்துரையின் பேரில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து டி.எஸ்.பி. ராஜசேகர், நெல்லை டவுன்இன்ஸ்பெக்டராக இருந்த ஜான் ரோஸ், சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், காவலர் கோவிந்தராஜ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நெல்லை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி ஜெயலட்சுமி உள்ளிட்டோர் நீதிபதி சிவதானு முன்னிலையில்ஆஜராகினர்.
காவலர் கோவிந்தராஜ், தான் பயணம் செய்த களைப்பில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக சில மணி நேரம் அவகாசம் தருமாறு கோரியதால் வழக்கு விசாரணையைபிற்பகலுக்கு மேல் நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications