15 ஆண்டு பழைய வழக்கில் ராபின் மெயின் கைது
சென்னை:
பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய ராபின் மெயின் 15 ஆண்டுகளுக்கு முந்தைய மோசடி வழக்கில் சிபிசிஐடிபோலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குகளில் சபாநாயகர் காளிமுத்துவும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந் நிலையில் ராபின் மெயினை மட்டும் சிபிசிஐடி போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
கடந்த 1990ம் ஆண்டு கார் ஒன்றை வளசரவாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான ஆர்.சி.புத்தகத்தைப் பெற்றார் மெயின். பின்னர் அதே காரை ராயபுரத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலககத்தில் காட்டிஇன்னொரு ஆர்.சி. புத்தகத்தைப் பெற முயன்றார் ராபின் மெயின்.
இதுதொடர்பாக போக்குவரத்து அலுவலகம் கொடுத்த புகாரின் பேரில் ராபின் மெயின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால்இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி போலீஸார் பின்னர் வழக்கை கைவிட்டனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குக்கு தமிழக அரசு இப்போது மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.
இந்த வழக்கை மீண்டும் நடத்தும்படி சிபிசிஐடிக்கு உள்துறைச் செயலாளர் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டாார். இதைத்தொடர்ந்து ராபின் மெயின் மீதான புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மெயின், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் வங்கி மோசடியில்தொடர்புள்ளவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?












Click it and Unblock the Notifications