கீரிப்பட்டி: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் அழகுமலை கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் ஊர் மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட அழகுமலை என்பவர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அழகுமலை, பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரிகளிடம் கொடுத்தார். அந்தக் கடிதம் மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிசீலனைக்குஅனுப்பப்பட்டுள்ளது. ஆட்சித் தலைவர் அந்தக் கடிதம் தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இந் நிலையில், அழகுமலையை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பூங்கொடி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.அதில், உயர் ஜாதியினரின் அச்சுறுத்தல் மற்றும் கட்டாயத்திற்குப் பணிந்தே அழகுமலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே அவரது ராஜினாமாகடிதத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி ரவிராஜ பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி சம்பந்தப்பட்ட அரசுத்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+