For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய தமிழகம் உடைந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி இரண்டாக உடைந்தது.

புதிய தமிழகம் கட்சியின் மாநில அளவிலான 8 நிர்வாகிகள் இன்று அக்கட்சியிலிருந்து விலகினர். தங்களது தலைமையிலான கட்சியே உண்மையான புதிய தமிழகம்என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுச் செயலாளர் துரையரசன் தலைமையில் 8 முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.இவர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

துரையரசன் பேசுகையில்,தொண்டர்களைப் பட்டினிப் போட்டு விட்டு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகிறார் கிருஷ்ணசாமி. பொருளாதார ரீதியில் தன்னை மிகவும்உயர்த்திக் கொண்ட அவர், கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் கைவிட்டு விட்டார்.

வரவு செலவு கணக்கு வேண்டும் என்று கேட்டோம். அது முடியாது என்று கூறி விட்டார். சுயமரியாதை வேண்டும் என்றோம். அதுவும் கிடைக்கவில்லை. எனவேகட்சியிலிருந்து விலகி விட்டோம்.

இன்னும் 20 நாட்களுக்குள் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, ஜனநாயக முறைப்படி கட்சியை வலுப்படுத்தி, உரிய கட்டமைப்பை ஏற்படுத்தி, புதிய பொலிவுடன்புதிய தமிழகம் கட்சியை நடத்தவுள்ளோம். எங்களது தலைமையில் உள்ளது தான் உண்மையான புதிய தமிழகம் கட்சியாகும் என்றார் துரையரசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X