ரயில் மீது கல்வீச்சு: அதிமுக எம்எல்ஏ காயம்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ரயில் மீது கல்வீசப்பட்டதில், ரயிலில் பயணம் செய்த அரியலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ படுகாயம் அடைந்தார்.
இதில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த இளவழகனின் இடது கண் புருவத்தில் கல் ஒன்று தாக்கியதில் ரத்தம் பீறிட்டது. உடன் அவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துரயிலை நிறுத்தினார். டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி செய்தனர்.
அதன்பின் 20 நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் ரயில்வே நிலையத்திற்கு வந்தது. அங்கு எம்எல்ஏவுக்கு ரயில்வே டாக்டர் அழகேசன்முதலுதவி அளித்தார். அதன்பின் அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைஅப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து ரயில் மீது கல் வீசியவர்களை தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications