கலிபோர்னியா, அந்தமானில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
கலிபோர்னியா & போர்ட் பிளேர்:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதியில் இன்றும் பூகம்பம் ஏற்பட்டது.
கலிபோர்னியா முதல் கனடா வரை சுனாமி தாக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால், சுனாமி பேரலைகள் ஏதும் எழாததால் அந்த எச்சரிக்கை வாபஸ்பெறப்பட்டுவிட்டது. கலிபோர்னியா நேரப்படி இரவு 7.50 மணிக்கு (இந்திய நேரப்படி காலை) இந்த நில நடுக்கம் உண்டானது.
வட கலிபோர்னியாவை ஒட்டிய கடல் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பல முறை சிறிய நில அதிர்வுகளும் உண்டாயின. இந்த நில அதிர்வை லாஸ்ஏஞ்ஜெல்ஸ், ஓரஞ்ச், சான்டியாகோ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்தது. பல இடங்களில் வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன.
கடந்த 15ம் தேதியும் 7.2 ரிக்டர் அளவுக்கு கலிபோர்னியா கடல் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தமானிலும் நிலநடுக்கம்:
அதே போல அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.
கிரேட்டர் நிக்கோபார் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 என்ற அளவுக்கு இருந்தது.
இன்று காலை 8.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications