For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை டம்ளர் முறை: சேலம் டீ கடைகளில் சோதனை!

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மாவட்டத்திலுள்ள சில தேனீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை (தலித்களுக்கு தனி டம்ளர்) அமல்படுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குபதிவாகியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேனீர் கடைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சேலம் மாவட்டம் திருமலைகிரி என்ற ஊரைச் சேர்ந்த காஞ்சமலையான் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனதுகிராமத்தில் இரட்டை டம்ளர் முறை இன்றும் நடைமுறையில் இருப்பதாகவும், தலித் சமுதாயத்தினர் இரண்டாம் தரமான நிலையில் நடத்தப்படுவதாகவும் புகார்கூறியிருந்தார்.

தலித்துகளுக்கான டம்ளரில் தேனீரை வாங்க தான் மறுப்பு தெரிவித்தபோது அந்த கடைக்காரர் தன்னை தாக்கியதாகவும் புகாரில் காஞ்சமலையான் கூறியிருந்தார். இந்தவழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், சேலம் மாவட்டத்தில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறுமாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

இந் நிலையில், வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவும் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை ஒன்றை அளித்தது. அதில்,மாவட்டத்தின் சில பகுதிகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமாரன், சோதனைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தலைமையிலானஅதிகாரிகள் குழு வாழப்பாடி, நாயக்கன்பட்டி, திருமலைகிரி, இளம்பிள்ளை, மூடுதுறை ஆகிய கிராமங்களில் திடீர் சோதனை நடத்தியது.

தேனீர் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி இரட்டை டம்ளர் முறை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். மேலும் ஊர் பொதுமக்களிடமும் அவர்கள்விசாரணை நடத்தினர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான டம்ளர் என்பதற்கு ஏதேனும் சங்கேத அடையாளம் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X