ஆதி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மோசடி மன்னன் ஆதி கேசவன் மீது இதுவரை 42 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்துவிசாரிக்கலாம் என அரசுக்கு காவல்துறை பரிந்துரைக்கவுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மோசடி மன்னன் ஆதிகேசவன் நூற்றுக்கணக்கானோரிடமும், வெளிநாட்டு இந்தியர்களிடமும்கடன் வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்து போலீஸில் சிக்கியுள்ளார். அவரது மகன் சாரதியும்,கூட்டாளிகளும்கூட போலீஸாரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆதி கேசவன் மீது இதுவரை 42 புகார்கள் பதிவாகியுள்ளன. சில வழக்குகளில் மட்டுமே அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.தற்போது அனைத்து வழக்குகளிலும் தனித் தனியாக அவர் கைது செய்யப்படவுள்ளார்.

அவர் மீதான வழக்குகளை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரித்தால் கால தாமதம் ஆகும் என்பதாலும், மற்ற வழக்குகளின்விசாரணையும் பாதிக்கப்படும் என்பதாலும், ஆதி மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கலாமா என்றுகாவல்துறை யோசித்து வருகிறது.

தனி நீதிமன்றம் அமைத்தால் விசாரணைக்கு எளிதாக இருக்கும் என ஆணையர் நடராஜுக்கு காவல்துறை அதிகாரிகள்பரிந்துரைத்துள்ளனர். இதுதொடர்பாக விரைவில் அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்புவார் நடராஜ் என்று கூறுகிறார்கள்.

இதற்கிடையே, தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பள அதிபர் தர்மராஜ் என்பவரிடம் மோசடி மன்னன் ஆதிகேசவன் ரூ. 35லட்சம்மோசடி செய்துள்ளதாக புதிய புகார் வந்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 65 வயதாகும் தர்மராஜ். இவர் தொழிலதிபர். உப்பளம் வைத்துள்ளார். சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து இவர் ஒரு புகாரைக் கொடுத்தார்.

அதில், கடந்த 2003ம் ஆண்டு தொழில் மேம்பாட்டுக்காக ரூ. 3 கோடி கடன் பெறுவதற்காக ஆதியை அணுகியுள்ளார் தேவராஜ்.இதற்காக ரூ. 35லட்சம் கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டு வழக்கம் போல செக்கைக் கிழித்து தேவராஜ் கையில் கொடுத்துஅனுப்பியுள்ளார் ஆதி.

ரூ. 75 லட்சம் வீதம் 3 கோடி 4 செக்குகளை கொடுத்துள்ளார் ஆதி. நான் சொன்ன பிறகுதான் இவற்றை வங்கியில் போடவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆதி சொல்லுவார், சொல்லுவார் என காத்திருந்த தர்மராஜ் அவர் சொல்லுகிற மாதிரிதெரியவில்லை என்றதும் நேரில் சென்று ஆதியை சந்தித்துள்ளார்.

பணத்தைப் போடுவதாக கூறி அவரை ஆதி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பலமுறை போய்க் கேட்டும் பலனில்லை. ஒருகட்டத்தில் தர்மராஜை அடியாட்கள் வைத்து மிரட்டியுள்ளார் ஆதி.

இதனால் பயந்து போன தர்மராஜ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இருப்பினும் ஆதியின் மிரட்டலுக்குப் பயந்து போலீஸில்புகார் கொடுக்கவில்லை.

இப்போது ஆதி கேசவன் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+