போலி வாக்காளர்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை- நரேஷ்குப்தா
மதுரை:
போலி வாக்காளர்கள் பிரச்சினை தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
பல வாக்காளர் விண்ணப்பங்களில் கையெழுத்து இல்லை, முகவரிகள் இல்லை. அவற்றையெல்லாம் பரிசீலனையின்போதுஉடனடியாக நிராகரித்து விடுவோம்.
வழக்கமாக வருவதை விட 4 சதவீதம் கூடுதலாக புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனவே இந்த விண்ணப்பங்களைமிகவும் கவனமுடன் பரிசீலித்து வருகிறோம்.
சந்தேகத்துக்குரிய விண்ணப்பங்கள் 999 பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரியை சரியாகநிரூபித்தால் அந்தப் பட்டியலிலிருந்து பெயர் எடுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடங்கும். அந்த சமயத்தின்போதுஅடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என்றார் நரேஷ்குப்தா.












Click it and Unblock the Notifications