மொழிப் பிரச்சினை: கருணாநிதியை சந்திக்கிறார் இளங்கோவன்
சென்னை:
மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தையும், பாமகவையும்கடுமையாக சாடியதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் தலை உருட்டப்படுவதால், அவரைசந்தித்து விளக்கம் அளிக்க இளங்கோவன் முடிவு செய்துள்ளார்.
பின்னர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இளங்கோவன்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குறித்தும், பாமகவினரின் போராட்டம் தொடர்பாகவும் மிகக் கடுமையாகவிமர்சித்தும், தமிழை நக்கலடித்தும் பேசினார் இளங்கோவன்.
இது பாமகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எரியும் நெருப்பில் பெட்ரோல்ஊற்றுவது போல கருணாநிதி சொல்லித் தான் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு எதிராக இளங்கோவன் பேசியுள்ளார்.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் காரணமாக தமிழர்களின் வாக்குகள் ராமதாஸ் பக்கம் திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் தான்கருணாநிதி அதற்கு எதிராக செயல்படுகிறார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளிக்கப் போக,பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாநிதி, நான் எதையும் சொல்லவில்லை, இளங்கோவனை நான் தூண்டி விட வில்லை என்றுஅவசரம் அவசரமாக விளக்கம் அளித்தார். மேலும், கூட்டணியை உடைக்கும் ஜெயலலிதாவின் சதி முயற்சியே இது என்றும்அதற்கு திருமாவளவன் துணை நிற்பதாகவும் அவர் கூறினார்.
தான் எதையோ பேசப் போக அது இந்த அளவுக்கு விஸ்வரூபமெடுக்கும் என எதிர்பார்க்காத இளங்கோவன், இப்பிரச்சினையில்கருணாநிதி தலையும் உருட்டப்படுவதால் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.
இதையடுத்து கருணாநிதியை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளார். இன்று அல்லது நாளை அவர்கருணாநிதியை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக கருணாநிதிக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இப்போது இளங்கோவனை தூண்டி விட்டுள்ளார் கருணாநிதி என்று பேச்சு எழுந்துள்ளதால், திமுக, பாமக இடையிலான கருத்துவேறுபாடு மேலும் பெரிதாகியுள்ளது.












Click it and Unblock the Notifications