ஜெயலட்சுமி என்னை விபச்சாரத்துக்கு அழைக்கவில்லை: போலீஸ் சாட்சி பல்டி
திருநெல்வேலி:
போலீஸார் என் மீது போட்ட பொய் வழக்குகளால் எனது வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டது என நெல்லைநீதிமன்றத்தில் சிவகாசி ஜெயலட்சுமி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நெல்லை போலீஸார் தன் மீது போட்ட விபச்சார வழக்கு பொய்யானது என்று ஜெயலட்சுமி கூறியிருந்தார்.ஜெயலட்சுமியின் இந்தப் புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறுஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் நெல்லை 4வது நீதித்துறை நநிடுவர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலட்சுமி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் நெல்லைநீதிமன்றத்தில் ஆஜராயினர்.
நீதிபதி சிவதானு முன் ஆஜரான ஜெயலட்சுமி சாட்சியம் அளிக்கையில்,
கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி கோவையிலிருந்து நெல்லைக்கு வந்தேன். இரவில் பஸ்ஸுக்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தபோது மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மரியரோணிக்கம் என்னை வந்துவலுக்கட்டாயமாக ஜீப்பில் அழைத்துச் சென்றார்.
முதலில் நகர காவல் நிலையத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குக்கூட்டிச் சென்றார். அங்கு என்னை அடித்து துன்புறுத்தினார்.
பின்னர் விபச்சாரம் செய்ததாக கூறி பொய் வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்.
என் மீது போடப்பட்ட முதல் பொய் வழக்கு அது தான். அந்த வழக்கினால் எனது வாழ்க்கையே சீரழிந்தது. அதன்பிறகு என் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன் பிறகு என் வாழ்க்கையில் எல்லாக்கஷ்டங்களும் ஏற்பட்டன என்று கண்ணீர் மல்க ஜெயலட்சுமி கூறினார்.
பின்னர் ஜெயலட்சுமி விபச்சாரத்துக்கு அழைத்ததாக போலீசாரால் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவிந்தராஜ்என்பவர் விசாரிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் கோவிந்தராஜ் சாட்சி அளிக்கையில், ஜெயலட்சுமி யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான்பார்த்தது கூட கிடையாது. என்னை விபச்சாரத்துக்கு அழைத்ததாக அவர் மீது போலீசிடம் நான் புகார் கொடுக்கவேஇல்லை.
என் பெயரில் எழுதப்பட்ட புகாரில் நான் கையெழுத்திடவும் இல்லை. இது பொய்யான வழக்கு என்று கூறிபோலீசாரின் முகத்தில் கரியை பூசினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதி நீதிபதி சிவதானு ஒத்திவைத்தார்.
டிஎஸ்பி ராஜசேகருக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், நெல்லை போலீசாரை விட்டு அவர்மீது விபச்சார வழக்குப் போட வைத்தார் ராஜசேகர் என்கிறது ஜெயலட்சுமி தரப்பு.