கண்ணகி சிலை மீண்டும் வரும்: கருணாநிதி நம்பிக்கை
சென்னை:
போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கக் காரணமான தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.அதுவரை ஓய மாட்டோம் என திமு‘க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, ஒட்டுமொத்தமாக மனுக்கள் கொடுத்தால் அதை ஏற்க முடியாது என்ற நிலை முன்புஇருந்தது. பின்னர் ஏற்கலாம் என்று உத்தரவு வந்தது.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் மொத்தமாக மனுக்களைக் கொடுத்தனர்.
அதில் பலருடைய விண்ணப்பங்களில் கையெழுத்தே இல்லை. முகவரியும் சரியாக இல்லை. அதேபோல அமைச்சர்கள் சிலர்கொடுத்துள்ள மனுக்களிலும் ஏராளமான போலி வாக்காளர்கள். 18 வயதுக்குக் குறைவான பலரின் பெயர்களை இந்த போலிவாக்காளர்களில் இணைத்துள்ளனர்.
அமைச்சர்கள் கொடுத்ததாயிற்றே என்று அதிகாரிகளும் அதை மறுக்காமல் வாங்கி பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்தஅமைச்சர்கள் தண்டனைக்கு உரியவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அதுவரை நாங்கள் ஓயப்போவதில்லை.
அனைத்துக் கட்சியினரும், பொது மக்களும் ஓரணியில் நின்று வாக்காளர் பட்டியலை சிதைக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும். இந்த அரசு, முன்பு இருந்தவற்றையெல்லாம் ரத்து செய்தது, ஒழித்துக் கட்டியது. இப்போது தேர்தல் நெருங்குவதால்,ஒவ்வொன்றையும் மீண்டும் கொண்டு வருகிறது.
அந்த வகையில் மெரீனாவிலிருந்து காணாமல் போன கண்ணகி சிலையும் கூட ஒரு நாள் திரும்பி வரலாம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications