லாரி மரத்தில் மோதி 4 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே மாம்பழம் ஏற்றி வந்த லாரி தறி கெட்டு ஓடி மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் சம்பவஇடத்திலேயே இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீதுபயங்கரமாக மோதியது.
இதில் லாரியில் பயணம் செய்த நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 2பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லாரியின் டிரைவர் குடிபோதையில், அரைத் தூக்கம் தூங்கிக் கொண்டே படு வேகத்தில் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications