டால்மியாபுரம் சிமென்ட் ஆலைக்கு நக்சல்கள் குண்டு மிரட்டல்
திருச்சி:
திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள சிமென்ட் நிறுவனத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக தமிழர்விடுதலைப் படை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பொறியாளர்கள், காண்டிராக்டர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களின்குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்குவதாக சிமென்ட் நிறுவனம் உறுதியளித்திருந்தது. இருப்பினும் அது வழங்கப்படவில்லை.
இந் நிலையில் நிறுவனத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில், 13 உயிர்களை பலி கொண்ட டால்மியா நிர்வாகமே இன்னும் ஒரு வாரத்தில் உன் நிறுவனத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுவைத்து உன் நிறுவனமே தகர்க்கப்படும். இது எச்சரிக்கை அல்ல, நிஜம். எம் மக்கள் உயிர் இழந்தமைக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். தீவிரவாதம் வளர்க, ஓங்குக.
இப்படிக்கு, தமிழர் விடுதலைப் படை, ஜெயங்கொண்டம் என எழுதப்பட்டிருந்தது.
திருச்சியிலிருந்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் டால்மியா நிறுவன நிர்வாகஇயக்குனர் கோபால்சாமி புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications