இளங்கோவனை தாக்கி பரபரப்பு போஸ்டர்கள்
சென்னை:
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தையும், பாமகவையும் கடுமையாக சாடிப் பேசிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைகடுமையான வார்த்தைகளால் விமர்சித்து சென்னை நகரின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இளங்கோவனின் பேச்சு பாமக மற்றும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பொறுப்பில்லாமல்இளங்கோவன் பேசியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸும், கருணாநிதி தூண்டி விட்டே இவ்வாறு இளங்கோவன் பேசியுள்ளதாகவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் விமர்சித்திருந்தனர்.
இந் நிலையில் சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுவரொட்டிகள்ஒட்டப்பட்டுள்ளன. இதில் இளங்கோவனை கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கன்னட தெரு நா.. என்று ஆரம்பித்து இளங்கோவனை கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் அதில் உள்ளன. இந்த திடீர்சுவரொட்டிகளால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.