சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம்
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேஓடிவந்தனர். விடியும் வரை அவர்கள் ரோட்டிலேயே தங்கினர்.
பல பகுதிகளில் வீடுகள் லேசாக குலுங்கியதாகவும், பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலநடுக்கத்தால் சேதம் ஏற்படவில்லையென்றாலும் மீண்டும் சுனாமி ஏற்படுமோ என்ற பீதி இப்பகுதி மக்களிடையேஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
இதே போல, மராட்டிய மாநிலத்திலுள்ள கொய்னா பகுதியிலும் நேற்று மாலை 7.56 மணியளவில் லேசான நிலநடுக்கம்ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications