சிறுமிகளுடன் செக்ஸ்: ராதாகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
சென்னை:
சிறுமிகளிடம் பாலியல் கொடுமைகளைச் செய்த முன்னாள் சுங்கத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் மீது சென்னைநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிறுமிகளை மகள்களாக தத்தெடுத்து பின்னர் அவர்களிடம் தனது பாலியல் வக்கிரத்தைக் காட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்ராதாகிருஷ்ணன். இவரது பாலியல் முறைகேடுகளுக்கு உதவியதாக குட்டி, பெருமாள், சரஸ்வதி, கோபி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்ளிட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தவிர குண்டர் சட்டத்தின் கீழும் ராதாகிருஷ்ணன்கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை போலீஸார் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்தனர். ராதாகிருஷணனின் மகன், தனது தந்தைக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் கொடுத்தள்ளது குறிப்பிடத்தக்கது.